The News Sponsor By
feature-top
feature-top

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதில், சர்வதேச உதவியுடன் இலங்கையை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தேசிய பொறுப்பாக கருதி, அதை நிறைவேற்ற கட்சி பேதங்களை கருத்தில் கொள்ளாது தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் பழைய அரசியலை ஒதுக்கிவிட்டு, எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க கைகோர்ப்போம். இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற ஒன்றிணைந்து செயல்பட, அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க உங்களை அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

feature-top
feature-top